பொள்ளாச்சி, ஏப். 24: பொள்ளாச்சியில், தாழ்வாக கட்டிய சாக்கடை பாலத்தால் குடியிருப்புகளில் கழிவுநீர் புகுந்து, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். பொள்ளாச்சியில் குடியிருப்புகள் அதிகம் உள்ள வார்டு பகுதியில் ஒன்றான 19 வார்டு கரிகால்சோழன் வீதி, ஆரோக்கியநாதர் வீதி உள்ளிட்ட பகுதி வழியாக செல்லும் சாக்கடை பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த சாக்கடை பாலம் கட்டப்பட்ட பாதைகளில் சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கரிகால்சோழன் வீதி வழியாக கழிவுநீர் செல்லும் சாக்கடையின் மேல் பகுதியில் உள்ள சிறுபாலமானது சேதமடைந்து காணப்பட்டது. பாதாள சாக்கடை பணி துவங்கியபோது, அப்பகுதியில பழுதான சிறுபாலம் அப்புறப்படுத்தப்பட்டு, புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது. சுமார் இரண்டு மாதத்திற்கு முன்பு துவங்கிய இப்பணி, சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. ஆனால், அந்த சாக்கடை பாலம் உயரம் இல்லாமல் மிகவும் தாழ்வாக கட்டப்பட்டுள்ளது.