×

வழிப்பறி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

பொள்ளாச்சி, ஏப். 24:  பொள்ளாச்சியை அடுத்த கோட்டூரை சேர்ந்தவர் சாமி. வியாபாரி. இவர் கடந்த 2017ம்  ஆண்டு மே மாதம் 11ம் தேதியன்று, பைக்கில் சென்றுகொண்டிருந்தார். கோட்டூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த சாமியை ஒருநபர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினார். பின், சாமியிடம் இருந்த அரைபவுன் மோதிரம் மற்றும் ரூ.450 ஐ வழிபறி செய்து தப்பியோடினார்.  இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கத்தியை காட்டி மிரட்டி, வழிப்பறியில் ஈடுபட்ட பொள்ளாச்சி பிகேசி காலனியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்தனர்.  இதுதொடர்பான வழக்கு விசாரணை, பொள்ளாச்சி சப்- கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வெங்கடேசனுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.

Tags : jailor ,
× RELATED ரஜினி – சன் பிக்சர்ஸ் இணையும் 5வது படம்...