குடிக்க பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது

ஈரோடு, ஏப். 24: ஈரோடு கருங்கல்பாளையம் கோட்டையார் வீதியைச் சேர்ந்தவர் பாலாஜி (54). இவர் நேற்று மரப்பாலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் பாலாஜியிடம் குடிப்பதற்கு 200 ரூபாய் பணம் கேட்டார். ஆனால் பாலாஜி பணம் தர மறுத்த நிலையில் பணம் கொடுக்காவிட்டால் கை, கால்களை உடைத்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து பாலாஜி ஈரோடு டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர். அவர் ஈரோடு குயவன்திட்டு பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்பவரின் மகன் கதிர்வேல் (25) என தெரியவந்தது.

Related Stories: