×

பாதுகாப்பற்ற சாலையால் பாதிப்பு

பந்தலூர், ஏப்.24: பந்தலூர் அருகே உள்ள உப்பட்டியில் இருந்து அத்திக்குன்னு செல்லும் நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. பந்தலூர் அருகே உள்ள உப்பட்டியில் இருந்து  அத்திக்குன்னு மற்றும் தேவாலா செல்லும் நெடுஞ்சாலையில் அத்திக்குன்னு தேயிலை தொழிற்சாலை அருகே சாலையோரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மண்சரிவு ஏற்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படும் அபாயம்  இருப்பதாக வாகனஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் சாலையோரத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...