×

கள் இறக்கிய விவசாயி கைது

சத்தியமங்கலம், ஏப்.24: புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள பனையம்பள்ளி பகுதியில் தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வதாக புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.ஐ. வசந்தகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது பனையம்பள்ளி மாகாளியம்மன் கோயில் அருகே குழியந்தோட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி(46) என்பவர் தனது தோட்டத்தில் உள்ள தென்னைமரத்தில் இருந்து இறக்கிய 5 லிட்டர் கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.  இதையடுத்து பழனிச்சாமியை போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...