ஈரோடு, ஏப்.24: ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, கள்ளிப்பட்டி கொடிக்கால் மேடு அருகே சென்றபோது, அங்கு ஒரு நபர் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பு சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில், அந்த நபர் கோபி கள்ளிப்பட்டி போஸ் வீதியை சேர்ந்த தவசியப்பன் (51) என தெரியவந்தது. தவசியப்பனை போலீசார் கைது செய்து, 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.