×

தீக்குளித்த பெண் சாவு

ஈரோடு, ஏப்.24:ஈரோடு கருங்கல்பாளையம் கேஏஎஸ் நகர் மரப்பாலம் 2வது வீதியை சேர்ந்தவர் செல்வராஜ், காய்கறி வியாபாரி. இவரது மனைவி மணிமேகலை (49). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மணிமேகலை கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் கடந்த 14ம் தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதைப்பார்த்த குடும்பத்தினர் மணிமேகலையை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : death ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...