×

விளையாட்டு விருதுகள் பெற விண்ணப்பிக்க அழைப்பு

ஊட்டி, ஏப். 24:  விளையாட்டு துறையில் சாதித்த வீரர், வீராங்கனைகள் விருதுகளுக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் கூறியிருப்பதாவது: விளையாட்டுத்துறையில் நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டி தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு பெடரேசன்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு தொடர்புடையவர்கள், அகிம்சை வழியில் அல்லது பிற காந்திய வழியில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளவர்கள் மற்றும் வீரதீரச் செயல்கள் புரிந்தவர்கள் ஆகியோருக்கு பல்வேறு விருதுகள் ஆண்டுதோறும் இந்திய அரசாங்கம் வழங்கி வருகிறது.

இதன்படி இந்த ஆண்டு விருதுகள் பெற தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன்படி ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜூணா விருது, ராஷ்ட்ரிய கேல் புரோட்சஹான் புரூஸ்கார் விருது, தயான்சந்த் விருது, துேராணாச்சரியா விருது, காந்தி அமைதி விருது, அசோகசக்ரா விருதுகள் வழங்கப்பட உள்ளது. விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் இருந்து பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்திற்கு வரும் 25ம் தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும். இவ்வாறு மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags : game ,
× RELATED ரம்மி விளையாட்டில் ரூ.30 ஆயிரம் இழப்பு போலீஸ்காரர் தற்கொலை