ஊட்டி, ஏப். 24: இத்தலார் கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. இதில், ஊர் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலர் ஜோதிமணி முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் ஆலன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார். வாசகர் வட்ட துணைத் தலைவர் அர்ஜுணன், விசு, ராமன், ஜோன், ராமன், பெள்ளன், லிங்கா கவுடர் ஆகியோர் கலந்துக் கொண்டு பேசினார்கள். இந்த விழாவை முன்னிட்டு புத்தக கண்காட்சி நடந்தது. தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியும் நடந்தது. முன்னதாக பள்ளி மாணவ மாணவிகளிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், மோகன்குமார், அேசாக்குமார், ஆலன், குபேரன் ஆகியார் தலா ரூ.ஆயிரம் வழங்கி புரவலராக சேர்ந்தனர்.