மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஏப்.24: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யகோரி மத்திய அரசு ஊழியர் ஒருங்கிணைப்புக்குழு, வருமானவரி ஊழியர் சம்மேளனம், அகில இந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ் ஊழியர் சங்கங்கள் சார்பில் ஈரோடு தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய அஞ்சல் ஆர்எம்எஸ் ஊழியர் சங்கங்களின் கோட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் சிவக்குமார், மாயவன், எழில்வாணன், கருப்பணன், தங்கராசு, கார்த்திகேயன் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய சங்க செயல் தலைவர் கோபாலகிருஷ்ணனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Stories: