×

பஸ் கண்ணாடி உடைப்பு

காரியாபட்டி, ஏப். 24: வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக்கோரி, காரியாபட்டி பஸ்நிலையம் முன்பு, ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சமூக பெண்கள் குறித்து அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக்கோரி மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில், அந்த சமூக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காரியாபட்டி அருகே, அந்த சமூக மக்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காரியாபட்டி போலீசார் சமாதானம் பேசினார். அப்போது, ‘வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியவர்களை கைது செய்ய வேண்டும். சமுதாய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின்பு காவல் நிலையம் சென்று மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சம்பந்தபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறி சமதானப்படுத்தினர். பின்பு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலின்போது மர்மநபர்கள் அரசு பஸ் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுப்பலன்:  வெற்றிலை பயிரிட, அறுவை சிகிச்சை செய்து கொள்ள, மாடு வாங்க, நோயுற்றோர் குளிக்க நன்று.

Tags :
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி