×

டூவீலர் ஓட்டிச் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

திருப்புவனம், ஏப். 24: பூவந்தி அருகே டூவீலரில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்கப்பட்டுள்ளது. திருப்புவனம் புதூரை சேர்ந்தவர் பாண்டிவேல் மனைவி அன்னபூரணம் (40). தனியார் தொண்டு நிறுவனத்தில் பணி செய்து வருகிறார்.  சிவகங்கையில் இருந்து படமாத்தூர் வழியாக திருப்புவனத்திற்கு தனது டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது படமாத்தூர் பெட்ரோல் பங்க் அருகே எதிரே டூவீலரில் வந்த இரண்டு பேர் கர்ச்சீப்பால் முகத்தை மறைத்தபடி அன்னபூரணம் வந்த பைக்கை வழி மறித்து அவர் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க செயினை பறித்தனர். அன்னபூரணம் செயினை பறிக்க விடாமல் தடுத்தார். இதில் செயின் அறுந்ததில் சில பகுதி மட்டும் அவரின் கையில் சிக்கியது. மீதி செயினுடன் மர்ம நபர்கள் இருவரும் டூவீலரில் தப்பிச்சென்று மறைந்தனர். அன்னபூர்ணம் கொடுத்த புகாரின் பேரில் பூவந்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED பணம் திருடியவர் கைது