×

மாவட்டத்தில் மழை அளவு ராஜபாளையத்தில் 132 மி.மீ பதிவு

விருதுநகர், ஏப். 24: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் மழை பெய்வதற்கான அறிகுறிகளுடன் மேகம் கருமையாக காணப்பட்டாலும், விருதுநகர் உட்பட பல இடங்களில் சூறை காற்று காரணமாக மழை பெய்யவில்லை. சாத்தூர், ராஜபாளையம், திருச்சுழி, காரியாபட்டி, வத்திராயிருப்பு பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் சாத்தூர் 13 மி.மீ., திருச்சுழி 10 மி.மீ, ராஜபாளையம் 132 மி.மீ, காரியாபட்டி 9.2 மி.மீ, வத்ராப் 39.80 மி.மீ, வெம்பக்கோட்டை 12 மி.மீ மழை பதிவானது. நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக மழை பெய்வதற்கான அறிகுறிகளுடன் புழுக்கம் நிலவிய நிலையில் விருதுநகர், சிவகாசி உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் மாலை 5 மணி முதல் காற்றுடன் கூடிய மழை பெய்தது. பல மாதங்களாக வெயிலால் அவதிப்பட்ட மக்கள் மழையின் குளுமையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : district ,Rajapalayam ,
× RELATED 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி...