×

இருக்கன்குடியில் நிரந்தர பஸ்நிலையம் அமைக்க கோரிக்கை

சாத்தூர், ஏப். 24: சாத்தூர் அருகே, இருக்கன்குடியில் அர்ச்சுணா நதியும், வைப்பாறும் இணையும் இடத்தில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் அருகில், இருக்கன்குடி அணையும், அதன் அருகே காசிவிசுவநாதர் கோயிலும் உள்ளது. இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு, தினசரி ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். முக்கிய விஷேச காலங்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், இருக்கன்குடி வரும் பஸ்களை நிறுத்துவதற்கோ, பயணிகள் வந்து செல்வதற்கோ, நகரில் பஸ்நிலையம் இல்லை. நகரில் உள்ள காவல்நிலையம் முன்பு பஸ்களை நிறுத்துகின்றனர்.

சில பஸ்களை இருக்கன்குடி-நென்மேனி சாலையில் நிறுத்துகின்றனர். இதனால், இருக்கன்குடி-அருப்புக்கோட்டை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. நிரந்தரமாக பஸ்நிலையம் இல்லாததாலும், பயணிகள் நிழற்குடை இல்லாததாலும், பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகளும், பக்தர்களும் கடை ஓரங்களில் நிழலுக்காக ஒதுங்குகின்றனர். எனவே, இருக்கன்குடியில் நிரந்தரமாக பஸ்நிலையம் அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus station ,
× RELATED கமுதி பேருந்து நிலையத்தில் ஆட்டோ,...