×

சுகாதார ஆய்வாளரின் பைக்கை திருடியவர் கைது

உத்தமபாளையம், ஏப்.24:  உத்தமபாளையம் பேரூராட்சியில் சுகாதார ஆய்வாளரின் பைக்கை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வரும் கருணாகரன். இவரது சொந்த ஊர் வத்தலக்குண்டு என்பதால் தனது பைக் ஒன்றை பேரூராட்சி அலுவலகத்தில் நிறுத்திவிட்டு தேர்தல் பணிக்காக கடந்த 18ம் தேதி தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில் 19ம் தேதி  பேரூராட்சி அலுவலக கேட் திறக்கப்பட்டு இருந்தது. இதனை பயன்படுத்தி பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடினார். இதையடுத்து போலீசார் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது மோட்டார் சைக்கிளை திருடி சென்றவர் கம்பம் வடக்குபட்டியை சேர்ந்த மணிகண்டன் மகன் விவேக் (28) என்பது தெரியவந்தது. விசாரணையில் கம்பத்தில் மேலும் ஒரு பைக்கை இவர் திருடியது தெரியவந்தது. இரண்டு பைக்குகளையும் உத்தமபாளையம் போலீசார் பறிமுதல் செய்தனர். பேரூராட்சி அலுவலக கண்காணிப்பு கேமரா காட்சிகளால் இவர் பிடிபட்டார்.

Tags : health inspector ,
× RELATED தெங்கம்புதூரில் ₹28 லட்சத்தில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மையம்