×

10ம் வகுப்பு துணை தேர்வு தட்கலில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

தேனி, ஏப்.24: பத்தாம் வகுப்பு சிறப்பு துணை தேர்வுக்கு தனித்தேர்வர்கள் தட்கலில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, ‘2019, ஜூனில் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், ஏப்.23 மற்றும் ஏப்.24ல் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில் நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். www.dge.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் அனைத்து முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களில் சேவை மைய விபரங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை அறியலாம்.

தேர்வுக் கட்டணம் ரூ.125, ஆன் லைன் பதிவுக்கட்டணம் ரூ.50, சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும். விண்ணப்பித்தபின் வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதால் இச்சீட்டை பத்திரமாக வைத்திருத்தல் வேண்டும். தேவையான சன்றிதழ்கள் இல்லாத விண்ணப்பம் மற்றும் தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Class Assistant Examination ,
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?