×

டூவீலரில் இருந்து கீழே விழுந்து பெண் சாவு

போடி, ஏப்.24: போடி அருகே கணவருடன் டூவீலரில் பின்னால் அமர்ந்துசென்ற மனைவி கீழே விழுந்து உயிரிழந்தார். போடி அருகே டொம்புச்சேரி பழனியாண்டவர் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(39). பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி(25). நேற்று இருவரும் டூவீலரில் போடி அருகே பரமசிவன் மலைக்கோயில் திருவிழாவிற்கு சாமி கும்பிட சென்றனர். விசுவாசபுரம் மயானம் அருகில் வந்தபோது சிவக்குமார் திடீரென பிரேக் அடித்தார். இதனால் பின்னால் இருந்த மனைவி கலைச்செல்வி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவரை போடி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போடி புறநகர் எஸ்ஐ செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?