×

மாணவருக்கு பாராட்டு

காரைக்குடி, ஏப்.24: பேச்சுபோட்டியில் கவர்னர் விருது பெற்ற அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி மாணவரை துணைவேந்தர் என்.ராஜேந்திரன் பாராட்டினர். சென்னை கவர்னர் மாளிகையில் காந்தியடிகளின் 150ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையேயான பேச்சு போட்டி நடந்தது. இதில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி மாணவர் யோகேஷ்குமார் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு பெற்றுள்ளார். இவருக்கு கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பரிசு வழங்கினார். வெற்றி பெற்ற மாணவரை துணைவேந்தர் என்.ராஜேந்திரன் பாராட்டினார். நிதி அலுவலர் பாலச்சந்திரன், கல்வியியல் கல்லூரி முதல்வர் பாலு உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags : student ,
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...