×

மாவட்டம் ஆன்மிக மலர் சனிதோறும் படியுங்கள் அரசு பள்ளி ஆண்டு விழா

ராமநாதபுரம், ஏப்.24: ஆர்.எஸ்.மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பொன்னையா தலைமை தாங்கினார். ஆசிரியர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சதக்கத்துல்லா வரவேற்றார். மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளை பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் குமரன் துவக்கி வைத்தார். முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி தலைவர் சசிக்குமார் விளக்கினார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்றதற்கு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாணவர் சங்க செயலாளர் பகுர்தீன், தீபம் இந்திய அறக்கட்டளை தலைவர் மதிவாணன், மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நுாருல் அமீன் மற்றும் முன்னாள் மாணவர்கள் திரளாக கலந்துகொண்டனர். உதவி தலைமை ஆசிரியை இந்திரா காந்தி நன்றி கூறினார்.

Tags : district ,school ceremony ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...