×

விடுமுறையிலும் மாணவர் சேர்க்கை தீவிரம்

தொண்டி, ஏப்.24: தொண்டி அருகே அரசு துவக்கப் பள்ளியில் விடுமுறை தினத்திலும் ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவால் பெரும்பாலான அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது. மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. தொண்டி அருகே உள்ள நம்புதாளை அரசு துவக்கப்பள்ளியில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலும் கடந்த கல்வி ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்த்து மாவட்டத்தில் அதிக மாணவர்கள் சேர்த்த பள்ளி என பெயர் பெற்றது.
வரும் கல்வி ஆண்டிலும் அதிக மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் தற்போது விடுமுறை காலத்தையும் பொருட்படுத்தாமல் நேற்று பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகை தந்து மாணவர்கள் சேர்க்கையில் ஈடுட்டனர். இதுவரையிலும் 50 மாணவர்கள் சேர்த்திருப்பதாக தெரிகிறது.
இதுகுறிதது தலைமை ஆசிரியர் ஜான்தாமஸ் கூறுகையில், ‘‘மாவட்டத்திலேயே அதிக மாணவர் சேர்த்த பள்ளி என்ற பெயர் இப்பள்ளிக்கு உண்டு. வரும் ஆண்டிலும் இதை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் விடுமுறையின் போதும் கூட ஆசிரியர்கள் மாணவர்கள் சேர்க்கைக்காக வந்துள்ளோம். அரசு பள்ளியில் தரமான கல்வி கொடுக்கப்படுகிறது என்பதை தெரிவிக்கும் விதமாக வீடுகள் தோறும் துண்டு பிரசுரம் கொடுத்து வருகிறோம்’’என்றார்.

Tags : vacation ,
× RELATED சட்டப்பிரிவு 370 ரத்து வழக்கு கோடை...