உசிலம்பட்டி அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு பலி

உசிலம்பட்டி, ஏப். 24: உசிலம்பட்டி தாலுகா, செட்டியபட்டி அருகேயுள்ளது குறிஞ்சிநகர். இதே ஊரைச் சேர்ந்த இந்த கிராமத்திலுள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பெரியமருது மகன் ராமன் 5 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்று போட்ட பசுமாடு கிணற்று ஓரங்களில் உள்ள இலை, தழைகளை தின்றபோது தண்ணீர் இல்லாத 80 அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்து விட்டது. பசுமாட்டை மீட்க உசிலம்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் காராமணி தலைமையிலான தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி பார்த்தபோது பசுமாடு தண்ணீரில்லாத கிணறு என்பதால் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது. அதன் உடலை மீட்டு கிணற்றிலிருந்து மேலே கொண்டு வந்தனர்.

Related Stories: