முதியவரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

மதுரை, ஏப். 24: மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்து என்ற துப்பாக்கி முத்து (66). இவரது வீட்டுக்கு பக்கத்து வீட்யை சேர்ந்தவர் நாகராஜ் (33). கடந்த 2013ம் ஆண்டு முத்துவுக்கும், பக்கத்து வீட்டுக்காரரான நாகராஜூவும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த நாகராஜ், முத்துவை கட்டையால் தாக்கி கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகராஜை கைது செய்தனர். இவ்வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு, குற்றம் நிரூபிக்கப்படாததால் நாகராஜூவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: