வக்கீல்கள் சாலை மறியல்

மதுரை, ஏப். 24: பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து மதுரையில் வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் காயமடைந்தனர். ஒரு தெருவில் ஏராளமான வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. இச்சம்பவத்தை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மதுரையில் நேற்று வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட நீதிமன்றம் முன்பு நடந்த மறியலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வக்கீல் அன்பழகன் தலைமை வகித்தார். இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். வக்கீல்கள் திடீர் மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Related Stories: