×

செல்போன் கடை உரிமையாளர் பலி

பழநி, ஏப். 24: பழநி அருகே கார் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் செல்போன் கடை உரிமையாளர் பலியானார். பழநி டவுன் கவுண்டன்குளத்தை சேர்ந்தவர் பாலாஜி (32). பழைய தாராபுரம் சாலையில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று வேடசந்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பச்சளநாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டேங்கர் லாரி இவரது கார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலாஜியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்