கோடை கால கூடைப்பந்தாட்ட பயிற்சி

திண்டுக்கல், ஏப். 24:  திண்டுக்கல் பில்டர்ஸ் அசோசியேசன், பிஎஸ்என்ஏ கல்லூரி மற்றும் பனாஸ்ரும் அக்ரோ லிமிடெட் சார்பில் கோடைக்கால கூடை பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஆர்எம் காலனியில் உள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் கடந்த 22ம் தேதி துவங்கிய இம்முகாம் மே மாதம் 18ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகிறார். கூடைப்பந்துவுடன் தியானம், யோகா, உடற்பயிற்சியும் மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வருவதாக கூடைப்பந்து பயிற்சியாளர் பங்காருசாமி தெரிவித்தார்.

Related Stories: