தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டம்

வத்தலக்குண்டு, ஏப். 24:  வத்தலக்குண்டுவில் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் தங்கப்பாண்டி பொன்னுச்சாமி, மாதவன், அஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் நலன் காக்க விவசாயிகள் கூட்டமைப்பினர் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் அதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றும், நதிகளை இணைக்க தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக நீதிதிரட்டி வழங்குவதென்றும், ஓட்டுக்கு பணம் கொடுப்பது தவறு அவ்வாறு பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக விவசாயிகள் கூட்டமைப்பு செயல்படும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது நிர்வாகி செல்வகுமார் நன்றி கூறினார்.

Related Stories: