கொடைக்கானல், ஏப். 24: கொடைக்கானல் வில்பட்டி கோவில்பட்டியை சேர்ந்தவர் சொக்கர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார், பூமிராஜா, ஜெகதா சிவகாமி ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சொக்கரின் வீட்டின் முன் பகுதியில் அருண்குமார், பூமிராஜா மது அருந்தியுள்ளனர். இதை சொக்கர் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் சென்ட்ரிங் கம்பியை எடுத்து சொக்கரை தாக்கியுள்ளனர். இதில் அவர் மண்டை உடைந்து சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரில் கொடைக்கானல் சப்இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிந்து அருண்குமார், பூமிராஜாவை கைது செய்தார்.