ரவுடியை வழிமறித்து கொல்ல முயற்சி கடலூர் முதுநகர் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

புதுச்சேரி, ஏப். 24: புதுவையில் கொலை வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகி திரும்பிய ரவுடியை வழிமறித்து கொலை செய்ய முயன்ற கடலூர் முதுநகர் கும்பலை தனிப்படை வலைவீசி தேடி வருகிறது. கடலூர், முதுநகரை சேர்ந்தவர் ராம்பிரசாத். கடந்த 2016ம் ஆண்டு பாகூர் முள்ளோடை மதுக்கடையில் கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த அருள், சுந்தர், பாலகிருஷ்ணா உள்ளிட்ட கும்பல் அவரை வெட்டி படுகொலை செய்தது. இதுதொடர்பாக பாகூர் போலீசார் வழக்குபதிந்து அருள் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை புதுச்சேரி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனிடையே இவ்வழக்கில் கைதான குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், கோர்ட்டில் வழக்கு விசாரணைக்காக அவ்வப்போது ஆஜராகி வந்தனர்.

 அதன்படி நேற்று முன்தினம் இவ்வழக்கில் ஆஜராக கடலூர் முதுநகரைச் சேர்ந்த அருள் தனது நண்பர்களுடன் புதுச்சேரி நீதிமன்றத்துக்கு வந்தார். அருள், நண்பரான சிவா ஆகியோர் ஒரு பைக்கிலும், கூட்டாளிகளான விக்னேஷ், பிரபாகரன் ஆகியோர் மற்றொரு பைக்கிலும் வந்தனர்.

Related Stories: