×

கார் கண்ணாடி உடைப்பு

பாகூர், ஏப். 24: பாகூரை சேர்ந்தவர் ஞானமூர்த்தி (40). இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர். சம்பவத்தன்று இரவு இவர் அங்குள்ள தனியார் திருமண மண்டபம் வழியாக தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவரது வீட்டின் அருகே சென்றபோது, காரின் பின்பக்கம் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர் இறங்கி பார்த்தபோது, காரின் கண்ணாடி உடைந்திருந்தது. மர்ம நபர் யாரோ கல்லால் காரை தாக்கியது தெரியவந்தது. இது குறித்து பாகூர் காவல் நிலையத்தில் ஞானமூர்த்தி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Car glass break ,
× RELATED டைரக்டர் செல்வமணியின் கார் கண்ணாடி உடைப்பு: சாலிகிராமத்தில் பரபரப்பு