மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

வில்லியனூர், ஏப். 24: சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்திய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.வில்லியனூர் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளை நடப்பதை தடுப்பதற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு பிள்ளையார்குப்பம் பகுதியில் வில்லியனூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த மினி டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, பிள்ளையார்குப்பம் சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.இதையடுத்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரியை ஓட்டி வந்த டிரைவர் முதலியார்பேட்டையை சேர்ந்த கவியரசன் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: