×

மது விற்ற 2 பேர் கைது

ஜெயங்கொண்டம், ஏப். 24: ஜெயங்கொண்டம் அடுத்த ஆண்டிமடம் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்டி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆண்டிமடம் அருகே உள்ள வரதராஜன்பேட்டை ஆரோக்கியபுரத்தை சேர்ந்த அருள்தாஸ் (51) என்பவர் விற்பனைக்கு வைத்திருந்த 7 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஆண்டிமடம் குரவன்குட்டை பகுதியில் ரமேஷ் (49) என்பவர் வைத்திருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து 2 பேரையும கைது செய்து ஆண்டிமடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது