×

சுத்தமல்லி புதுத்தெருவில் மோட்டார் பழுதால் 8 மாதமாக இயங்காத குடிநீர் தொட்டி பொதுமக்கள் அவதி

தா.பழூர், ஏப்.24: சுத்தமல்லி புதுத்தெருவில் மோட்டார் பழுதால் குடிநீர் தொட்டி 8 மாதமாக இயங்கவில்லை. இதனால் 8 மாதமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சுத்தமல்லி கிராமம் புதுத்தெருவில் குடிநீர் ெதாட்டி உள்ளது. இந்த தொட்டியில் மோட்டார் பழுதானதால் கடந்த 8 மாதமாக இயங்கவில்லை. இதனால் இப்பகுதியில் வசித்து வரும் மக்கள், தண்ணீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது தெரு குழாய்களில் 2 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. புதுத்தெருவில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள், குடிநீர் தொட்டியை நம்பியே உள்ளது.

தற்போது தெரு குழாய்களில் தண்ணீர் திறந்து விட்டாலும் 2 நாட்களுக்கு ஒரு முறை ஒரு வேளை மட்டும் தண்ணீர் வருவதால் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால் தண்ணீரை தேடி விளைநிலங்களில் விவசாயத்துக்கு தண்ணீர் பாய்ச்சக்கூடிய மோட்டார் பம்புகள் தேடி செல்லக்கூடிய அவல நிலையில் பொதுமக்கள் உள்ளனர். தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகமான நிலையில் குளம், குட்டை, வாய்க்கால் என அனைத்திலும் தண்ணீர் இல்லாத நிலையில் கால்நடைகளும் தவித்து வருகிறது. எனவே தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் குடிநீர் தொட்டி மோட்டாரை சரி செய்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Suthamalli Puducherry ,
× RELATED சுத்தமல்லி புதுத்தெருவில் குடிநீர்...