×

குளித்தலையில் கார் மீது மோதி பால கட்டையில் தொங்கிய நிலையில் நின்ற வேன் பயணிகள் உயிர் தப்பினர்

குளித்தலை, ஏப்.24:  கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் நேற்று மாலை காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது தரகம்பட்டி பால்மடை பட்டியை சேர்ந்தவ வேன் டிரைவர்  வேல்முருகன்(29)  நாமக்கல்லில் இருந்து முசிறி வழியாக குளித்தலை நோக்கி முசிறி பெரியார் பாலத்தில் வந்து கொண்டிருந்தார்.

 அப்போது எதிரே சென்ற வாகனத்திற்காக பிரேக் போட்டதில் வேன் தடுமாறி திருச்சியிலிருந்து மங்களம் செல்வதற்காக வந்து கொண்டிருந்த தனியார் கார் ஒன்றில் மோதி பால கட்டையில் தொங்கிய நிலையில் நின்றது இதில் வேன் டிரைவர் வேல்முருகன் தலையில் காயங்களுடன் தப்பினார் மேலும் இந்த விபத்தில் தனியார் காரில் ஏர் பலூன் இருந்ததினால் கார் டிரைவர் நவீன் (23) மற்றும் அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேலும் இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : van passenger ,bridge ,
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...