×

வேலாயுதம்பாளையம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற வேன் பறிமுதல் டிரைவருக்கு வலை

கரூர், ஏப். 24: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே  அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற வேனை போலீசார் பறிமுதல்  செய்தனர். தப்பியோடிய டிரைவரை  போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள நஞ்சைபுகளூர் அருகே அனுமதியின்றி, ஈச்சர் வேனில் மணல் மூட்டைகள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளதாக வேலாயுதம்பாளையம் போலீசார்களுக்கு தகவல் வந்தது.சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், அந்த பகுதியில் 100 மணல் மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த வேனை பறிமுதல் செய்த போலீசார், வேனில் இருந்து தப்பியோடி லாரி டிரைவர் ராஜேஸ் என்பவரை தேடி வருகின்றனர்.



Tags : Vayayutthulapalayam ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு