கல்லணையில் ஆண் சடலம்

திருக்காட்டுப்பள்ளி, ஏப். 24: தஞ்சை மாவட்டம் கல்லணையில் காவிரி ஆற்றின் தென்கரையோரம் உள்ள வாய்க்காலில் நேற்று காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. இறந்தவருக்கு 55 வயது இருக்கும். நீலநிற கைலியும், வெள்ளை நிற அரைக்கை சட்டையும் அணிந்துள்ளார். விஷம் குடித்து இறந்து கிடப்பதாக போலீசார் கூறினர். இவர் யார், எப்படி கல்லணை வந்தார், தற் கொலை செய்து கொண்டாரா என்று தோகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: