இலங்கையில் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்

கும்பகோணம், ஏப். 24: இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொது செயலாளர் ஈமுகம்மது வெளியிட்டுள்ள அறிக்ைக: ஈஸ்டர் திருநாளான்று இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அப்பாவி மக்களை கொலை செய்யும் தீவிரவாத செயலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இலங்கையில் குண்டு வெடிப்புகள் ஓய்ந்துபோன நிலையில் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்குகிறதோ என்று நினைக்கும் வகையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். இந்த குண்டு வெடிப்புக்கு காரணமான பயங்கரவாதிகளின் மீது இலங்கை அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: