×

மயிலாடுதுறை அருகே இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது

மயிலாடுதுறை, ஏப்.24: மயிலாடுதுறை அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்துள்ள நீடூர் கீழத்தெரு காலனி பகுதியில் ஒரே தெருவை சேர்ந்தவர்களுக்குள் இருந்த முன்விரோதத்தால் 10 வெட்டப்பட்டதில் இளவரசன்(35) மற்றும் தங்கமணி(32) ஆகிய இரண்டு பேர் பலியானார்கள். மற்ற 8 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இக்கொலையில் ஈடுபட்டவர்களில் நேற்றுமுன்தினம் வரை 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளான கண்ணதாசன்(65), சேட்டு என்கிற முருகையன்(32) ஆகிய இருவரையும் மயிலாடுதுறை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Mayiladuthurai ,
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...