×

சீர்காழி பகுதிகளில் திடீர் மழை

சீர்காழி, ஏப்.24: சீர்காழி பகுதிகளில் நேற்று திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அக்னி நடச்சத்திர வெயில் துவங்கும் முன்பே வெயில் கடுமையாக மக்களை வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் பகலில் வெளிவர முடியாமல் வீட்டிலேயே முடங்குகிடக்கின்றனர்.  இந்நிலையில் வைத்தீஸ்வரன் கோயில் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நீண்ட நேரம் நீடிக்கும் என பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் மழை நின்றுவிட்டது. தொடர்ந்து வெயலின் தாக்கத்தில் தவித்து வந்த பொதுமக்களுக்கு இந்த மழை சற்றே குளிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த மழையால் பருத்தி, எள், கத்திரி, தர்பூசணி, வெள்ளரி பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Sirkali ,
× RELATED சீர்காலி கடைவீதியில் மருத்துவ குணம் கொண்ட செவ்வாழை பழம் விற்பனை