×

புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்புக்கு மே 5க்குள் விண்ணப்பிக்கலாம்

கொள்ளிடம், ஏப்.24: புத்தூர் எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை படிப்புக்கு மே5க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-20ம் கல்வி ஆண்டிற்கான பி.ஏ.தமிழ் இலக்கியம், பி.ஏ ஆங்கிலம் இலக்கியம், பி.காம், பி.எஸ்ஸி கணிதம் மற்றும் பி.எஸ்ஸி கணிணி அறிவியல் போன்ற இளங்கலை பட்டப்படிப்புக்களுக்கான சேர்க்கை விண்ணப்ப படிவங்கள் கல்லூரியில் 22ம் தேதி  முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.வரும் மே6 ம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்லூரியில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் கல்லூரி அறிவிப்பு பலகையிலும், மாணவர்களுக்கான கலந்தாய்வு அட்டையிலும் கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் தங்களின் சாதிச் சான்றிதழின் நகலை கொடுத்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று கல்லூரி முதல்வர் முனைவர் லெட்சுமி தெரிவித்தார்.

Tags : Applicant ,Mullaperiyar ,
× RELATED பென்னிகுக் நினைவாக லோயர் கேம்ப் அரசு...