×

கன்னியாகுமரி அருகே பரபரப்பு முட்புதரில் வாலிபர் சடலம்

கன்னியாகுமரி, ஏப். 24: கன்னியாகுமரி அருகே முட்புதரில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது.கன்னியாகுமரி அருகே உள்ளது பொற்றையடி. இங்கு நாகர்கோவிலில் இருந்து வரும் புதிய 4 வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி. பல இடங்களில் முட்புதர்களும் நிறைந்து காணப்படுகின்றன.இந்த நிலையில் நேற்று காலை பொற்றையடி பகுதி பொதுமக்கள் முட்புதர்களுக்கு இடையே அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்ததை கண்டனர். இது குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன், இன்ஸ்ெபக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவர் முக்கால் பேன்ட் மற்றும் சட்டை அணிந்திருந்தார். அவை கிழிந்த நிலையில் காணப்பட்டன. உடல் அழுகிய நிலையில் இருந்தது.

சடலம் கிடந்த பகுதியில் மது பாட்டில்கள் உடைந்து கிடந்தன. மது அருந்திய அடையாளங்களும் காணப்பட்டன. மது அருந்திய தகராறில் அந்த வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ? என்ற சந்தேகம் எழுந்தது.போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த வாலிபர் உடல்நலக்குறைவால் இறந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. அவர்  யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற எந்த விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : thornbush ,Kanyakumari ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...