×

குமரி மாவட்டத்தில் பாலிடெக்னிக் விண்ணப்ப வினியோகம் தொடக்கம்

நாகர்கோவில், ஏப். 24: பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேற்று முதல் விண்ணப்ப வினியோகம் தொடங்கியது.நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் விண்ணப்பம் வாங்க காலை முதல் ஏராளமான மாணவ, மாணவிகள் வந்தனர். விண்ணப்ப கட்டணம் ₹150 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு விண்ணப்பம் இலவசமாக வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 1000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. மே மாதம் 10ம் தேதி வரை விண்ணப்ப வினியோகம் இருக்கும் என்று கோணம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜா ஆறுமுகநயினார் தெரிவித்துள்ளார்.

Tags : Kumari District ,
× RELATED குமரி மாவட்டத்தில் அதிவேக டாரஸ் லாரிகளால் தொடரும் விபத்துக்கள்