×

சவுடு மண் திருடியவர் கைது டிராக்டர் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி, ஏப்.24: கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஒபுளாபுரம் ஊராட்சியில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதே பகுதியில்  சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியில் சவுடு மண் திருடப்படுவதாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் நேற்று காலை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் தலைமையில் போலீசார் பெரிய ஒபுளாபுரம் ஏரி பகுதிக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நேமராஜ் (37) என்பவர் டிராக்டரில் சவுடு மணல் ஏற்றி  வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து. சிறையில் அடைத்தனர். சவுடு மணல் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.


Tags : slayer thieves ,
× RELATED அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு...