×

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆசிரியர்கள் வீடு வீடாக விழிப்புணர்வு பிரசாரம்

பள்ளிப்பட்டு, ஏப். 24: பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டுர்பேட்டை  ஊராட்சி ஒன்றிய முன் மாதிரி துவக்கப் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நடந்தது. அதில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.எஸ். இளங்கோவன் தலைமை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்   ராஜேந்திரன், திருத்தணி கல்வி மாவட்ட அலுவலர் எம். எம். லோகமணி ஆகியோர்  மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சியை  துவக்கி வைத்தனர்.

பின்னர் அவர்கள்,   வீடு வீடாக சென்று மாணவர்களின் பெற்றோரை சந்தித்து அரசுப் பள்ளிகளின் கல்வி தரம், சிறந்த ஆசிரியர்கள், கட்டட வசதி, இலவச கல்வி உபகரணங்கள் குறித்து விளக்கி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.  இதனை அடுத்து  15 மாணவர்களை முதல் வகுப்பில் சேர்க்க பெற்றோர் முன் வந்தனர். இதில், வட்டார கல்வி அலுவலர் வெங்கடேசுலு, பள்ளி ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.



Tags : Student admissions teachers ,government schools ,awareness campaign ,
× RELATED அங்கன்வாடி குழந்தைகள் விவரங்களை...