×

லண்டன் தனியார் நிறுவன அதிகாரி மயங்கி விழுந்து சாவு

சென்னை, ஏப். 24:திருச்சி பொன்நகரை சேர்ந்தவர் பெட்ரிக் ஜோசப் (61). லண்டனில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மேன்ஷன். லண்டனில் டாக்டராக பணியாற்றுகிறார். இவரது மகள் ஜெபரா லண்டன் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார். கடந்த வாரம் பெட்ரிக் ஜோசப், தனது சொந்த ஊரான திருச்சிக்கு வந்தார். . பின்னர், 3 பேரும் லண்டன் செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு பெட்ரிக் ஜோசப், சென்னை விமான நிலையம் வந்தார்.
நேற்று அதிகாலை 2.15 மணிக்கு பெங்களூர் செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் செல்ல, சென்னை உள் நாட்டு விமான நிலையத்துக்கு சென்றனர். அங்கு போர்டிங்க் பாஸ் வாங்கி கொண்டு பாதுகாப்பு சோதனை முடித்துவிட்டு, விமானம் நோக்கி சென்றனர்.
அப்போது திடீரென, பெட்ரிக் ஜோசப் திடீரென மயங்கி இதை பார்த்த அவரது மனைவி, மகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சக பயணிகள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து சக்கர நாற்காலி வரவழைக்கப்பட்டு அவரை, விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பேட்ரிக் ஜோசப்பை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் கடுமையான மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறினர். அதை கேட்டதும், மனைவி, மகள் கதறி அழுதனர். சக பயணிகளும் சோகத்தில் ஆழ்ந்தனர்.தகவலறிந்து சென்னை விமான நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்து, அவரது உடல் சொந்த ஊரான திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.


Tags : London ,company ,death ,
× RELATED லண்டனில் இருந்து வந்தவருக்கு...