×

லாரி மோதி பழ வியாபாரி பலி

கும்மிடிப்பூண்டி, ஏப்.24: மெதிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (53). பழ வியாபாரி. இவர் நேற்று  வீட்டில் இருந்து பழ வியாபாரம் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் ஏழுகண்ணு  மேம்பாலம் அருகே வந்தார். அவர் மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியுள்ளது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். தகவலறிந்த ஆரம்பாக்கம் போலீசார் வந்து ஏழுமலையின் உடலைக்  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ெறாரு சம்பவம்: கும்மிடிப்பூண்டி அடுத்த செதில்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (47).  இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தீராத வயிற்று வலி காரணமாக பூச்சி  மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதை அறிந்த அக்கம்  பக்கத்தினர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  அங்கு சிகிக்சை பலனின்றி  முனுசாமி  உயிர்  உயிரிழந்தார். இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags : Larry Kitty ,fruit shop ,
× RELATED கோயம்பேடு பழ அங்காடியை திறக்க...