×

கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி, ஏப்.24: இலங்கை குண்டுவெடிப்பு குறித்த செய்தியில் இயேசு கிறிஸ்துவை அவமதிப்பு செய்ததாக ஒரு தினசரி நாளிதழை கண்டித்து அகில இந்திய கிறிஸ்தவர்கள் முன்னேற்ற சங்கத்தினர் பொன்னேரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஈஸ்டர் பண்டிகை தினத்தில் இலங்கை தேவாலயங்களில் குண்டு வெடித்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்ட தினசரி நாளேடு ஒன்று ‘ஓ சேசப்பா’ என தலைப்பு கொடுத்திருந்தது. இந்த தலைப்புக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், நேற்று காலை பொன்னேரி பஜார் பகுதியில் அகில இந்திய கிறிஸ்துவர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒரு தினசரி நாளேடு இயேசு கிறிஸ்துவை அவமதிக்கும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளது கண்டிக்க தக்கது. உடனடியாக அதன் நிர்வாகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி செய்தி வெளியிட வேண்டும்.

Tags : Christians ,
× RELATED கோயில் கும்பாபிஷேகத்திற்கு பூஜை...