×

தம்பி தூக்கிட்டு தற்கொலை அண்ணனிடம் விசாரணை


ஆவடி, ஏப்.24:  ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகர் கிழக்கு காரமராஜர் 10வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தன்  மகன் அஜித் (18), இவர் பாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.  மது குடிக்கும் பழக்கம் உடையவர்.
இந்நிலையில், அஜீத் ஸ்டைலாக முடி வெட்டிக்கொண்டு வந்ததை, அவரது அண்ணன் கங்காதரன் கண்டித்ததாக தெரிகிறது. இதனால், மனம் உடைந்த அஜித் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த கங்காதரன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அஜித்தை மீட்டு கேஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அஜித் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : suicide brother ,Thambi Thillai ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...