×

மனைவி, மகள் கண் எதிரே தனியார் நிறுவன அதிகாரி மயங்கி விழுந்து சாவு: விமான நிலையத்தில் பரபரப்பு


சென்னை, ஏப். 24: விமான நிலையத்தில் திடீர் மாரடைப்பால் லண்டன் தனியார் நிறுவன அதிகாரி மயங்கி விழுந்து இறந்தார். இதை பார்த்த அவரது மனைவி, மகள் கதறி அழுதனர்.திருச்சி பொன்நகரை சேர்ந்தவர் பெட்ரிக் ஜோசப் (61). லண்டனில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மேன்ஷன். லண்டனில் டாக்டராக பணியாற்றுகிறார். இவரது மகள் ஜெபரா லண்டன் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார். அனைவரும் லண்டன் குடியுரிமை பெற்றுள்ளனர்.கடந்த வாரம் பெட்ரிக் ஜோசப், தனது சொந்த ஊரான திருச்சியில் நடந்த உறவினரின் வீட்டு நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்டார். பின்னர், 3 பேரும் லண்டன் செல்ல முடிவு செய்தனர். ஆனால் அவர்களுக்கு, சென்னையில் இருந்து நேரடியாக செல்லும் விமானத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.இதையடுத்து பெங்களூர் சென்று, அங்கிருந்து லண்டன் செல்ல திட்டமிட்டனர். அதன்படி அவர்களுக்கு விமான டிக்கெட் கிடைத்தது. தொடர்ந்து, பெங்களூர் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு பெட்ரிக் ஜோசப், சென்னை விமான நிலையம் வந்தார்.நேற்று அதிகாலை 2.15 மணிக்கு பெங்களூர் செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் செல்ல, சென்னை உள் நாட்டு விமான நிலையத்துக்கு சென்றனர். அங்கு போர்டிங்க் பாஸ் வாங்கி கொண்டு பாதுகாப்பு சோதனை முடித்துவிட்டு, விமானம் நோக்கி சென்றனர். அப்போது திடீரென, பெட்ரிக் ஜோசப் திடீரென மயங்கி  இதை பார்த்த அவரது மனைவி, மகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சக பயணிகள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து சக்கர நாற்காலி வரவழைக்கப்பட்டு அவரை, விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பேட்ரிக் ஜோசப்பை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் கடுமையான மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறினர். அதை கேட்டதும், மனைவி, மகள் கதறி அழுதனர். சக பயணிகளும் சோகத்தில் ஆழ்ந்தனர்.தகவலறிந்து சென்னை விமான நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்து, அவரது உடல் சொந்த ஊரான திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.உலகின் எந்த பகுதியில் இருந்தாலும், தனது சொந்த ஊரில் இறுதி சடங்கு நடக்க வேண்டும் என பெட்ரிக் ஜோசப் கூறி வந்துள்ளார். அதேபோல், நேற்று லண்டன் புறப்பட்ட அவர், திடீரென சென்னையில் மயங்கி விழுந்து இறந்தார். அவரது உடல் இறுதி சடங்குக்காக திருச்சி கொண்டு செல்லப்பட்டது என உறவினர்கள் கூறினர்.


Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...