பெரம்பூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஆசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டையார்பேட்டை டி.ஹெச் ரோடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த மணி (49) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், தண்டையார்பேட்டை போலீசார் கடந்த 10 மாதத்திற்கு முன், மணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வௌியில் வந்தார்.