அண்ணாநகர்: சென்னை பாடி கலைவாணர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (60). இவருக்கு மனைவி மற்றும் சூரியபிரகாஷ் (26), குமரேசன் என்ற மகன்களும், பிரியா என்ற மகளும் உள்ளனர். தமிழ்செல்வன், தனது வீட்டின் அருகே பழக்கடை நடத்தி வந்தார். இவருக்கு உதவியாக அவரது குடும்பத்தினர் இருந்து வருகின்றனர்.சூரியபிரகாஷ் குடிப்பழக்கம் உடையவர். அடிக்கடி குடித்து விட்டு, பெற்றோருடன் தகராறு செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்குவதற்கு தயாராகினர்.அப்போது, வெளியே சென்ற சூரியபிரகாஷ், மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார். இதனால், ஆத்திரமடைந்த தமிழ்செல்வன், மகனை கண்டித்துள்ளார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.